அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதி செயலாளர் மைக்கல் செபஸ்டியன் அவர்களின் மறைவு இலகுவில் ஈடு செய்ய முடியாதது. 1965ம் ஆண்டு வி கே வெள்ளையன் தொழிலாளர் தேசிய சங்கத்தினை ஸ்தாபிக்கும்போது அவருக்கு உறுதுணையாக இருந்தவர். அவர் மறைந்த பின்னும் அதே கொள்கையோடு சங்கத்தினை வழிநடத்தியவர்களில் ஒருவர்.
1965ல் இருந்து இன்றுவரை 56 வருடங்கள் சங்கத்தின் நலனுக்காகவும் மக்களின் நலனுக்காகவும் செயற்பட்ட ஒரு சிறந்த நிர்வாகியை இழந்திருக்கின்றோம். பிரதிநிதியாக சங்கத்தில் இணைந்து, உதவி செயலாளர், நிர்வாக செயலாளர் என பதவி வகித்ததோடு கடந்த . 20 வருட காலமாக நிதி செயலாளராக பணியாற்றிய இவர் எங்களுக்கெல்லாம் நல்ல வழிகாட்டியாகவும் இருந்துள்ளார். சங்கத்தின் இக்கட்டான நிலைமையில்கூட சங்கத்திற்காகவே உழைத்தவர். அவரின் இழப்பு பெரு வேதனை தருகிறது அன்னாரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment