கல்முனை ஸாஹிரா ஆங்கில ஆசிரியர் ஷஃபி எச். இஸ்மாயிலுக்கு பாராட்டு!



நூருள் ஹுதா உமர்-
ல்முனை ஸாஹிரா கல்லூரியின் பட்டதாரி ஆங்கில ஆசிரியரும், நீதிக்கான மையத்தின் தலைவருமான சட்டமானி ஷஃபி எச். இஸ்மாயில் இலங்கை சட்டக்கல்லூரி அட்டோனி இறுதிப் பரீட்சையில் ஆங்கில மொழியில் தோற்றி சித்தி அடைந்ததற்கான பாராட்டு விழாவொன்று இன்றிரவு மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு கல்லூரியின் அதிபர் எம்.ஐ. ஜாபிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
பாடசாலை வரலாற்றில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆசிரியராக கடமையாற்றும் போதே சட்டத்தரணியாக தகுதி பெற்ற ஆசிரியர் ஷஃபி எச்.இஸ்மாயிலை பாராட்டும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பாராட்டு விழாவானது கல்லூரியின் சிரேஷ்ட ஆசிரியர் சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்போது சட்டமானி ஷஃபி எச்.இஸ்மாயிலுக்கு ஆசிரிய சமூகத்தினரால் பொன்னாடை, நினைவுச் சின்னம் என்பன வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
மேற்படி நிகழ்வில் கல்லூரியின் அதிபர், பிரதி அதிபர்கள், சிரேஷ்ட ஆசிரியர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :