மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட கோறளைப்பற்று மேற்கு கோட்ட கல்வி வலயத்தில் அறபா நகரில் முன்னாள் பிரதியமைச்சரும் கல்குடா முஸ்லிம் பிரதேசங்களில் வாழும் மக்களின் உள்ளத்தில் மறக்காமல் இருக்கின்ற மிகச் சிறந்த பண்பான அரசியல் வாதியாக அடையாளப்படுத்தி வாழ்ந்து மறைந்த மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் பெயரில் ஒரு பாடசாலை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான நசீர் அகமட் அவர்களின் முயற்சியினால் அறபா நகர் வாழும் மக்களின் ஒத்துழைப்போடும் புதிய பாடசாலை ஒன்று மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன் முதற்கட்டமாக அறபா நகர் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினரின் ஏற்பாட்டின் பேரில் மாகாண கல்வித் திணைக்கள பொறியியலாளர் ஹக்கீம் அவர்களோடு மாகாணக் கல்விப்பணிப்பாளர் அவர்களை சந்தித்து புதிய பாடசாலை ஆரம்பிப்பதற்கான ஆவணங்களை நேற்று 08.11.2021 கையளித்திருந்தனர்.
0 comments :
Post a Comment