மீண்டும் கல்முனைப்பிராந்தியத்தில் கொரோனா திவீரமாகிறது!



தென்கிழக்குபல்கலையில் 37மாணவர்: பொத்துவில் பொலிஸில்11பேர்!
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுகுணன் எச்சரிக்கை.
வி.ரி.சகாதேவராஜா-

ல்முனைப்பிராந்தியத்தில் மீண்டும் கொரோனா திவீரமாகிவருகிறது. தென்கிழக்குபல்கலைக்கழகத்தில் 37மாணவருக்கும் ,பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் 11பேருக்கும் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மக்கள் சுகாதாரவழிமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றி அவதானமாகவிருக்கவேண்டும்
என்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்:
கடந்த 3 தினங்களாக கல்முனை பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட கோவிட் பரிசோதனையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 37 மாணவர்கள் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
தொற்றுக்குள்ளான மாணவர்கள் அனைவரும் அட்டாளைச்சேனை கோவிட் இடைநிலை முகாமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளர்கள்

இலங்கையில் தற்போது கட்டுப்பாட்டு நிலைமை தளர்த்தப்பட்ட நிலையிலும், பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் பல இடங்களில் கோவிட் தொற்று அதிகரித்த நிலைமையை காட்டியுள்ளது.

10 தொடக்கம் 20 வீதம் வரையான கோவிட் தொற்று அதிகரித்து காணப்படுகின்றது. இதனடிப்படையில்
எமது கல்முனை பிராந்தியத்தில் 3 தினங்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 37 மாணவர்கள் கோவிட் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர்.

அத்துடன், நேற்று(22) மேற்கொள்ளப்பட்ட அன்டீஜன் கோவிட் பரிசோதனையின் போது பொத்துவில் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 11 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில் பெரும்பாலானோர் மொனராகலை மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர்.

இவர்கள் அனைவரும் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவவர்கள் என்பதும் குறிப்பிட்டுச்சொல்லக்கூடியது.


எனவே, தடுப்பூசிகளை பெற்றுவிட்டோம் என்பதற்காக சுகாதாரவிதிமுறைகளை கடைப்பிடிக்க தவறவேண்டாம். அவதானமாக இருங்கள். தவறினால் முன்னயைகாலங்களைப்போல் நாம் தடுப்பு முறைகளை மேலும் திவீரமாக்கவேண்டிவரும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :