கொட்டகலை கிறிஸ்லஸ்பாம் - கே.ஜி.கே பாதை மக்கள் பாவனைக்கு கையளிப்பு



க.கிஷாந்தன்-
கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட கிறிஸ்லஸ்பாம் - கே.ஜி.கே பாதை காபட் இடப்பட்டு மக்கள் பாவனைக்கு இன்று (07.11.2021) கையளிக்கப்பட்டது.

கொட்டகலை – அட்டன் பிரதான வீதியில் இருந்து உள்ளே செல்லும் கிறிஸ்லஸ்பாம் - கே.ஜி.கே பாதையானது கடந்த வருடம் புணரமைப்பு வேலை ஆரம்பிக்கப்பட்டது. 4.45 கிலோமீற்றர் பாதையானது 80 மில்லியன் ரூபா செலவில் புணரமைக்கப்பட்டுள்ளது.

கொட்டகலை பிரதேச சபை தவிசாளர் ராஜமணி பிரசாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தோட்ட வீடமைப்பு, சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு பாதையினை மக்கள் பாவனைக்கு கையளித்தார்.

இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதப்பாண்டி இராமேஸ்வரன், முன்னார் மத்திய மகாணசபை உறுப்பினர்கள் கணபதி கனகராஜ், அருளானந்தம் பிலிப்குமார் மற்றும் கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்துக் கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :