திருகோணமலை சிறிகோணேஸ்வரா இந்துக்கல்லூரி. 125வது வருட நினைவாக பழைய மாணவர்களால் 3 திறன் பலகைகள்



ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை சிறிகோணேஸ்வரா இந்துக்கல்லூரி. 125வது வருட நினைவாக 1992ம் வருடம் சாதாரணதரமும், 1995ம் வருடம் உயர்தரமும் கற்ற மாணவர்கள் ஒன்றிணைந்து 3 திறன் பலகைகளை Smart Board கல்லூரிக்கு ஏற்படுத்தி தந்துள்ளனர்.
மாணவர்களின் தேவை கருதி பல்ஊடக அறை, விஞ்ஞான பிரிவு, இடைநிலை பிரிவு அறகளில் இவை பொருத்தப்பட்டுள்ளது.
இதனை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு நேற்று புதன்கிழமை (.24 ) காலை நடைபெற்றது.
முந்நாள் ஓய்வுநிலை அதிபர்களான சி.தண்டாயுதபாணி, மா.இராசரெத்தினம், இ.புவனேந்திரன் ஆகியோரைக்கொண்டு பல்லூடக அறையிலும், ஓய்வுநிலை
முந்நாள் ஆசிரியர்களான த.சச்சிதானந்தராஜா, ந.விக்னேஸ்வரன், நா.ஜெகன்மோகன் ஆகியோரைக் கொண்டு விஞ்ஞான பிரிவிலும், முந்நாள் ஓய்வுநிலை ஆசிரியைகளான திருமதி அ.கணேசலிங்கம், திருமதி பா.தர்மராஜா,திருமதி க.இராஜகோண் ஆகியோரைக் கொண்டு இடைநிலை பிரிவிலும் இவை அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :