அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து கூட்டமைப்பு தொடர்ந்தும் செயற்படும் - சாணக்கியன்



னுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணத்திற்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 'அண்மையில் அச்சுறுத்தப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை அண்மையில் நாங்கள் சந்தித்து பேசியிருந்தோம்.

நாங்கள் அவர்களை சந்தித்து பேசும் போது, அவர்கள் அமர்வதற்கு கதிரைகள் கூட அவர்களுக்கு வழங்கப்படவில்லை. எனினும் நாங்கள் வலியுறுத்தி அவர்கள் அமர்ந்து பேச கதிரைகளை பெற்றுக்கொடுத்தோம்.

அவர்களை நாங்கள் சந்தித்து பேசும் போது, சிறைச்சாலை ஊழியர்களும் அருகில் இருந்தமையினால் பல விடயங்களை பேச முடியவில்லை. எனினும் அவர்கள் தங்களை யாழ்ப்பாணத்திற்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு எங்களிடம் தெரிவித்தனர்.

ஆனால் தன்னிடம் அப்படி அவர்கள் கூறவில்லை என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும் அவர்கள் எங்களிடம் அதனைத் தெரிவித்தார்கள். அதேபோன்று நடைபெற்ற சம்பவத்திற்கு நீதிஅமைச்சர் மன்னிப்பு கோரியமையினை நாங்கள் வரவேற்கின்றோம்.

இதேவேளை, அண்மையில் சில அரசியல் கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். முகப்புத்தகத்தில் பதிவிட்ட குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரின் விடுதலைக்காகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற வகையில் நாங்கள் தொடர்ந்தும் பாடுபடுவோம்.“ எனக் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :