மஜ்மா நகர் புரியாத புதிர்களுக்கு விடைகாண்போம்.



ஜ்மா நகர் Covit19 ஜனாஸா அடக்கும் விடயத்தில் தேவையற்ற விதமான மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைமை ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களை வஞ்சிக்கும் சிலர் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக ஜனாஸாக்களை அடக்கும் விஷயத்தில் அவர் மேற்கொண்ட முயற்சி அளப்பரியது மஜ்மா நகர் போல் இலங்கையில் எத்தனையோ இடங்கள்,காணிகள் இருக்கும் போது ஏன் மட்டக்களப்பில் உள்ள மஜ்மா நகர் தெரிவு செய்யப்பட்டது அதுவும் குறிப்பாக ஏறாவூரை சேர்ந்தவர்களான மார்ச் 03 மரணித்த அசனத்தும்மா என்ற பெண்ணின் ஜனாஸாவும் அத்தோடு பெப்ரவரி 27 மரணித்த உதவிக்கல்வி பணிப்பாளார் ஹலீல் ஆகியோரின் ஜனாஸாக்கள் முதல் தடவையாக அதுவும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகம் ஜனாஸாக்கள் அடக்கப்படாதா என்ற ஏக்கத்தில் இருக்கும் சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் அவர்கள் மார்ச் 05 ம் திகதி அதிகாலை 5.48 மணியளவில் I.D.H வைத்தியசாலையில் உள்ள அசனத்தும்மாவின் ஜனாசாவை வாகனத்தில் ஏற்றி இராணுவத்தின் முழு உதவியுடன் குருணாகல் போதனா வைத்தியசாலையில் இருந்த கலீல் சேரின் ஜனாஸாவையும் ஏற்றிக் கொண்டு பலத்த பாதுகாப்புடன் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி எமது பாராளுமன்ற உறுப்பினர் சுமார் 3.20 மணியளவில் ஜனாஸாக்களை அடக்கம் செய்தனர்.

ஆனால் அதே நாள் 05.03.2021 காலை 11.00 மணிக்கு நிபுணர் குழுவினர் கூடுவதற்கு முன்பாகவே இங்கே ஜனாஸாக்கள் கொண்டு வரப்பட்டு அடக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ் இதற்கு உதவிய இறைவனைப் புகழ்ந்து தனது டுவிட்டரில் அபிலாஷைகள் அர்த்தமாகின, அல்லாஹு அக்பர்! என்று அச்சந்தர்ப்பத்தில் நஸீர் அஹமட் எம்.பி பதிவிட்டிருந்தார்.

உண்மையில் சாணக்கியமான முறையில் தனது ஆளுமையைப் பயன்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மஜ்மா நகரை தெரிவு செய்வதில் நஸீர் அஹமட் ஆற்றிய பங்கு அளப்பரியது ஜனாஸாக்கள் அடக்கும்வரைக்கும் யாருக்குமே தெரியாது ஜனாஸாக்கள் எங்கே அடக்கப்படவுள்ளது என்பது அவ்வாறான முறையில் அதனை மேற்கொண்டு வெற்றி கொண்டார்
அதே போல் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக கிண்ணியாவிலும் ஜனாஸாக்கள் அடக்கம் செய்தவதற்கான அனுமதியும் தற்போது கிடைக்கப் பெற்று சகல ஏற்பாடுகளும் இடம் பெற்று வருகின்றது.அத்தோடு மஜ்மா நகரில் உள்ள காணிப்பிரச்சினைக்கும் குறுகிய காலத்தில் தீர்வு பெறப்படவுள்ளது மேலும் நாட்டில் பல்வேறு பகுதிகளில் கொவிட் ஜனாஸா நல்லடக்கத்திற்கான பல்வேறு இடங்கள் பரிந்துரைக்கப்பட்டு விரைவில் ஜனாஸாக்கள் அடக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன.

எமது அரசியல் தலைமை குறிப்பாக சமூக சார்ந்த பல்வேறு விடயங்களை அரசுடன் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் போராடி வெற்றிகண்டு வருகின்றனர் அவர்களை பாராட்டாமல் இருந்தாலும் பரவாயில்லை வாய்க்கு வந்தவாறு விமர்சிப்பதை தவிர்த்து அவர்கள் எதிர்வரும் காலங்களில் சமூக ரீதியாக மேற்கொள்ளும் விடயங்கள் வெற்றியளிக்கப் பிரார்த்திப்போம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களே! அவருக்கு இங்குள்ள காத்தான்குடி,கல்குடா,ஏறாவூர் என்று பிரதேசவாத அரசியல் செய்யும் நோக்கம் எதுவுமில்லை அவர் எப்போது மக்களை பிரித்தாளுவதுமில்லை அதை கடந்த மாகாண சபை அரசியலிலும் முதலமைச்சர் என்ற வகிபாகத்தை சிறப்பாக அதுவும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைத்து எவ்வித இனவாதங்களும் இன்றி வழிநாடாத்திய ஓர் சிறந்த தலைமை என்பதை இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகின்றேன். எதிர்கால சவால்கள் அனைத்தையும் நாம் அனைவரும் வெற்றிகொள்ள எமது பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் அவர்களை பலப்படுத்துவோம்.

ஆகவே தேவையற்ற முறையில் மக்களை குழப்பமடையச் செய்கின்ற வகையில் பொய்யான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி அரசியல் செய்பவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :