ஆனால் அதே நாள் 05.03.2021 காலை 11.00 மணிக்கு நிபுணர் குழுவினர் கூடுவதற்கு முன்பாகவே இங்கே ஜனாஸாக்கள் கொண்டு வரப்பட்டு அடக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ் இதற்கு உதவிய இறைவனைப் புகழ்ந்து தனது டுவிட்டரில் அபிலாஷைகள் அர்த்தமாகின, அல்லாஹு அக்பர்! என்று அச்சந்தர்ப்பத்தில் நஸீர் அஹமட் எம்.பி பதிவிட்டிருந்தார்.
உண்மையில் சாணக்கியமான முறையில் தனது ஆளுமையைப் பயன்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மஜ்மா நகரை தெரிவு செய்வதில் நஸீர் அஹமட் ஆற்றிய பங்கு அளப்பரியது ஜனாஸாக்கள் அடக்கும்வரைக்கும் யாருக்குமே தெரியாது ஜனாஸாக்கள் எங்கே அடக்கப்படவுள்ளது என்பது அவ்வாறான முறையில் அதனை மேற்கொண்டு வெற்றி கொண்டார்
அதே போல் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக கிண்ணியாவிலும் ஜனாஸாக்கள் அடக்கம் செய்தவதற்கான அனுமதியும் தற்போது கிடைக்கப் பெற்று சகல ஏற்பாடுகளும் இடம் பெற்று வருகின்றது.அத்தோடு மஜ்மா நகரில் உள்ள காணிப்பிரச்சினைக்கும் குறுகிய காலத்தில் தீர்வு பெறப்படவுள்ளது மேலும் நாட்டில் பல்வேறு பகுதிகளில் கொவிட் ஜனாஸா நல்லடக்கத்திற்கான பல்வேறு இடங்கள் பரிந்துரைக்கப்பட்டு விரைவில் ஜனாஸாக்கள் அடக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன.
எமது அரசியல் தலைமை குறிப்பாக சமூக சார்ந்த பல்வேறு விடயங்களை அரசுடன் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் போராடி வெற்றிகண்டு வருகின்றனர் அவர்களை பாராட்டாமல் இருந்தாலும் பரவாயில்லை வாய்க்கு வந்தவாறு விமர்சிப்பதை தவிர்த்து அவர்கள் எதிர்வரும் காலங்களில் சமூக ரீதியாக மேற்கொள்ளும் விடயங்கள் வெற்றியளிக்கப் பிரார்த்திப்போம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களே! அவருக்கு இங்குள்ள காத்தான்குடி,கல்குடா,ஏறாவூர் என்று பிரதேசவாத அரசியல் செய்யும் நோக்கம் எதுவுமில்லை அவர் எப்போது மக்களை பிரித்தாளுவதுமில்லை அதை கடந்த மாகாண சபை அரசியலிலும் முதலமைச்சர் என்ற வகிபாகத்தை சிறப்பாக அதுவும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைத்து எவ்வித இனவாதங்களும் இன்றி வழிநாடாத்திய ஓர் சிறந்த தலைமை என்பதை இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகின்றேன். எதிர்கால சவால்கள் அனைத்தையும் நாம் அனைவரும் வெற்றிகொள்ள எமது பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் அவர்களை பலப்படுத்துவோம்.
ஆகவே தேவையற்ற முறையில் மக்களை குழப்பமடையச் செய்கின்ற வகையில் பொய்யான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி அரசியல் செய்பவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்.
0 comments :
Post a Comment