கொட்டகலையில் விபத்து இருவர் படுகாயம்



நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
ட்டன் தலவாக்கலை பிரதான வீதியின் கொட்டகலை பகுதியில் டிப்பர் லொறியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொட்டகலை சுரங்கப்பாதைக்கு அருகிலே 31/07 மாலை 05 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தலவைக்கலையிலிருந்து கொட்டகலை நோக்கி வந்த முச்சக்கரவண்டியும் அட்டனிலிருந்து தலவாக்கலை சென்ற டிப்பர் லொறியுமே மோதுண்டு விபத்துக்குள்ளானது
அதிக வேகமே விபத்துக்கான காரணம் என தெரிவித்த பொலிஸார் முச்சக்கரவண்டியை செலுத்திய சாரதியும் அதில் பயணித்த இளைஞன் ஒருவருமாக இருவர் படுகாயமடைந்து கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
டிப்பர் லொறியின் சாரதி கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :