யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற தேசிய விளையாட்டு தின நிகழ்வுகள்



யாழ் லக்சன்-
லங்கையின் தேசியவிளையாட்டு தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் காலை 8.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக முன்றலில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் அவர்களின் தலைமையில் ஊழஎனை-19 சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக தேசியவிளையாட்டு தினநிகழ்வுகள் இடம்பெற்றன.

இந் நிகழ்வில் தேசியக் கொடியினை மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள் ஏற்றிவைத்ததை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமானது.தொடர்ந்து,

நிறுவனத்தின் உத்தியோகத்தர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையின் ஊடாக பயனுறுதி வாய்ந்த சேவையை வழங்குவதற்காக உடற்பயிற்சி, உள்நாட்டு உணவுகளினதும் போஷாக்கினதும் முக்கியத்துவம் , மனஅழுத்தத்தை குறைப்பதற்கான வழிமுறைகள் , மற்றும் தியானத்தின் முக்கியத்துவம் ஆகிய விடயங்கள் தொடர்பாக சிறப்புரையை யாழ்.பல் கலைக்கழக உடற்கல்வி விஞ்ஞான அலகு சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ச.சபானந்த் அவர்கள் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் இறுதியாக மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உடற்பயிற்சிகளில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :