யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையங்கள் திடீர் பரிசோதனை



யாழ் லக்சன்-
யாழ் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களால் யாழ்ப்பாணம், கைதடி, சாவகச்சேரி, கோப்பாய், கல்வியங்காடு, திருநெல்வேலி ஆகிய பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் பரிசோதிக்கப்பட்டு விலை தொடர்பான கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ன.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டளைக்கு அமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளரின் வழிகாட்டலுக்கு அமைவாகவும் இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது விலை காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலும் வழங்கப்பட்டது. மேலும் வர்த்தமானி அறிவுறுத்தலுக்கு அமைவாக வர்த்தக நிலையங்களிற்கு எரிவாயுவின் விலை தொடர்பான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

அத்தோடு ஒன்லைன் மூலமான இறக்குமதியாளர் விபரம் குறிப்பிடப்படாத சருமப்பூச்சு வகைகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்த வியாபார நிலையங்கள் பரிசோதிக்கப்பட்டு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :