கஹட்டோவிட்டயில் நீரில் மூழ்கி ஒருவர் பலி!



நவீட் நஸீர்-
இன்று நிட்டம்புவை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கஹட்டோவிட்ட கிராமத்தில் ஒருவர் வெள்ள நீருக்கு பலியாகி உள்ளார்.
இன்று பிற்பகல் நடந்த குறித்த சம்பவத்தில், 80/a, கஹட்டோவிட்ட, வெயாங்கொட என்ற விலாசத்தைசேர்ந்த, மொஹமட் லுக்மான் ஆக்கீப் அனாம் (18) என்பவரே இவ்வாறு வெள்ளநீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார். இவர் மதுரங்குளி மேர்ஸி லங்கா (Mercy lanka school) என்ற பாடசாலையின் மாணவராவார்.
கஹட்டோவிட்ட மக்கள் கடும் பிரயத்தனப்பட்டு தேடுதல் நடாத்தியதால், ஒரு மணித்தியாலத்தில் மூழ்கியவரின் உடலை மீட்டு எடுத்தனர்.
தற்போது பிரேத பரிசோதனைக்காக அவரது ஜனாஸா வத்துபிட்டிவல வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை நிட்டம்புவை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

இந்தக்கிராமம் அடிக்கடி மழை காரணமாக வெள்ள அபாயத்தை எதிர் நோக்கும் ஒரு பிரதேசம் ஆகும். தற்போதும் சீரற்ற காலநிலை காரணமாக இக்கிராம மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :