தீப்பற்றிய கப்பல் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தொடர்ந்தும் விசாரணை



கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில தீப்பற்றிய கப்பல் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுக்கின்றது. சம்பவம் தொடர்பாக இதுவரை 16 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

கப்பலின் பிரதான அதிகாரிகளின் வாக்குமூலங்கள் இதில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். கப்பலில் கொள்கலன்களை உள்வாங்குவதற்கு அவரே பொறுப்பாளராக செயல்பட்டுள்ளார்.

கப்பலில் ஏற்றப்பட்ட இரசாயனப் பொருட்கள் பற்றியும் விசாரணைகள் இடம்பெறுகின்றன குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் என்பவற்றின் அதிகாரிகள் கப்பலுக்கு சென்று இது பற்றி நேற்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :