ஓட்டமாவடி பிரதான வீதிகளில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் சோதனை



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில் தேவையின்றி மக்கள் வெளிச் செல்வதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு பிரிவினர் சோதனை நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தலைமையிலான பொலிஸ் குழுவினர் மற்றும் இராணுவத்தினர் ஓட்டமாவடி பிரதேசத்தில் பிரதான வீதிகளில் தேவையின்றி வரும் மக்களை சோதனை செய்து வீட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கும் நடவடிக்கை இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில் அனுமதி பெற்றவர்கள் மற்றும் மருந்தகங்கள் என்பவற்றுக்கு செல்பவர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், தேவையின்றி வெளியில் செல்பவர்களை பரிசோதனை செய்து வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மருந்தகங்கள் மாத்திரம் திறந்து காணப்படுவதுடன், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :