கல்முனை பிரதேசத்தில் வீடு வீடாக சென்று அரசாங்கத்தின் 5000/-ரூபாய் கொடுப்பனவு வழங்கல்



சர்ஜுன் லாபீர்-
நாட்டில் தற்போது துரிதமாக பரவிவரும் கொரோனா வைரஸ் இன் மூன்றாவது அலையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000/-ரூபாய் கொடுப்பணவு இன்று நாடு பூராகவும் வழங்கப்பட்டு வருகின்றது
அந்த வகையில் கல்முனை பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி தலைமையில் இன்று(2) கல்முனைக்குடி-12,மருதமுனை -1 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் பயணத்தடை காரணமாக ஒவ்வொரு வீடுகளாக சென்று கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும்,மாவட்ட சமூர்த்தி பணிப்பாளருமான வி.ஜெகதீசன் கலந்து கொண்டு கொடுப்பணவுகளை வழங்கி வைத்தார்.மேலும் இந் நிகழ்வுக்கு சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர் சாலீஹ், சமூர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.எஸ்.வரீரா,சமூர்த்தி திட்ட முகாமையாளர் எஸ்.சித்தி நயீமா, கல்முனைகுடி சமூர்த்தி வலய வங்கி முகாமையாளர் எம்.புவிராஜ், உதவி முகாமையாளர் எஸ்.எல் அஸிஸ்,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சம்சுதீன், அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.டி சபீனா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வு சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நாட்டில் பயணக்கட்டுப்பாட்டு நடைமுறையினையும் கருத்திற் கொண்டு குறிப்பிட்ட சிலரை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :