அனைத்து மருத்துவமனைகளிலும் இனி கொவிட் தடுப்பூசி பெறலாம்!



M.I.M.இர்ஷாத்-
நாளை திங்கட்கிழமை முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கை துரிதப்படுத்தப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் டொக்டர் பிரசாத் கொலம்பகே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, அனைத்து பிரதான வைத்தியசாலைகளிலும் தடுப்பூசி மத்திய நிலையங்களை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

முதியவர்கள் வைத்தியசாலைகளுக்கு வருகைத் தரும் போது, விண்ணப்ப படிவத்தை நிரப்பிக்கொண்டு வருவதுடன், தேசிய அடையாளஅட்டையை எடுத்து வருமாறும் அவர் கோரியுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :