நாட்டிலும், கிழக்கிலும் பரவலாக பரவிவரும் கோரோனோ அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் இன்று வெள்ளிக்கிழமை (21) நிந்தவூர் பிரதேச வீதியோர வியாபாரிகள்,பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சுகாதார வழிமுறைகளை பேணாதோர்,முகக் கவசம் அணியாமல் வீதிகளில் உலாவித்திரிவோருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி.Dr.பறூசா நக்பர் தலைமையில்
நிந்தவூர் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் சித்திக் அவர்களின் மேற்பார்வையில் பொது சுகாதார பரிசோதகர் SKS ஆகியோருடன் சுகாதார பரிசோதகர்களின் பங்கு பற்றுதலுடன் இடம் பெற்றது.
0 comments :
Post a Comment