பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் அரசியல் பாசறையில் பயில்பெற்ற இளம் தலைவரான பாயிஸ் இளம் வயதிலேயே புத்தளம் நகர சபையின் தலைவராக 1997 ஆம் ஆண்டு முதல் பல தடவைகள் பதவி வகித்து வந்துள்ளார்.
மேலும் பாராளுமன்ற உறுப்பினராகவும் பிரதியமைச்சராகவும் பதவிகள் வகித்ததுடன் எல்லா நிலமைமைகளிலும் மக்களின் துயரறிந்து உயரிய சேவைகளை ஆற்றியுள்ளார்.
புத்தளம் மண்ணோடும் மண்ணின் மக்களோடும் இரண்டறக் கலந்து உயர் பணிகள் பல ஆற்றிய அன்னாரின் பிரிவுச் செய்தி எமக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது.
அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் நண்பர்கள் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
கே. காதர் மஸ்தான்
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்
மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும்.

0 comments :
Post a Comment