கிண்ணியா பிரதேசத்தில் கொரோனாவினால் பாரூக் குறைஸ்( 12) என்பவர் மரணமடைந்துள்ளார்.
கிண்ணியா துறையடியை பிறப்பிடமாகவும் குறிஞ்சாக்கேணியை வசிப்பிடமாக கொண்டவரும், இலங்கை மின்சாரம் சபையில் சாரதியாக வேலை செய்த 40 வயதையுடைய இரு பிள்ளைகளின் தந்தை கந்தளாய் வைத்தியசாலையில் காலமானார்.
கொரோனா மூச்சுத் திணரல் காரணமாக மரணமடைந்ததாக குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் ஏ. எம்.எம்.அஜீத் தெரிவித்தார்.
கொரோனா பரிசோதனையின் மூலம் கொரோனா தொற்று உள்ளதென அடையாளம் காணப் பட்டதையடுத்து ஈச்சிலம் பற்று கொரோனா தடுப்பு நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.மேலதிக சிகிச்சைக்காக கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இவ்வாறு மரணமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கொரோனா தொற்று காரணமாக கிண்ணியா சுகாதார வைத்தியதிகாரி அலுவலகப் பிரிவில் இருவரும் ,குறிஞ்சாக்கேணி சுகாதார அலுவலகப் பிரிவில் இருவருமாக இதுவரை கிண்ணியா பிரதேச செயலகப் பிரிலில் நான்கு பேர் இறந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.
0 comments :
Post a Comment