கல்முனையில் பொலிஸாருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றல் !



எம்.என்.எம். அப்ராஸ்-
நாட்டில் பரவலாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதாரத்துறை பல்வேறு முன்னெடுப்புக்களை செய்துவருகிறது. இதன் ஒரு அங்கமாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி .சுகுணனனின் வழிகாட்லில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.ஆர்.எம் .அஸ்மி தலைமையில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று (13) இடம் பெற்றது .

இதன் போது கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எம் ஜயரட்ன, கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பரிசோதகர் கே.டீ. சுஜித் பிரியந்த, கல்முனை பொலிஸ் நிலைய பெரும் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம். ஜெமீல் உட்பட கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டனர்.
மேலும் இதன் போது மாவட்ட பொது சுகாதர பரிசோதகர் ஏ.எம்.ஜெளபர், பிரதேச மேற்பார்வை பொதுச்சுகாதர பரிசோதகர் எம் பாறூக், பொது சுகாதர பரிசோதகர்கள், கல்முனை தெற்கு சுகாதர வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :