கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் ஊடகவியலாளர்கள் மகத்தான பணி -வெகுஜன ஊடகத்துறை அமைச்சர்



கொரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைக்கு மத்தியிலும் ஊடகவியலாளர்கள் மகத்தான பணிகளை நாட்டு மக்களுக்காக மேற்கொண்டு வருகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும் தேசத்தின் கௌரவம் உரித்தாக வேண்டுமென்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
'சர்வதேச ஊடக சுதந்திர தினம்' இன்றாகும். உலகின் நான்காவது சக்தியாகக் கருதப்படும் ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகுமென்றும் ஊடகத்துறை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

'சுபீட்சத்தின் தொலைநோக்கு' என்ற வேலைத்திட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்களின் பணிகளுக்கு உயர்ந்தபட்ச கௌரவமும் வழங்கப்பட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊடகவியலாளர்களுக்கென நடைமுறைப்படுத்தப்படவிருந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் போனதாகவும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :