அரசியலுக்கு வருகிறார் சட்டமா அதிபர்- அதிர்ச்சியில் உயர்பீடம்!



J.f.காமிலா பேகம்-
ட்டமா அதிபர் தப்புல டி லிவேரா விரைவில் அரசியலுக்கு வரப் போகின்றார் என்கிற தகவல் பிரதான அரசியல் கட்சிகளிடையே காட்டுத்தீயாக பரவியிருக்கின்றது.
கனேடிய உயர்ஸ்தானிகர் பதவியை ஜனாதிபதி அவருக்கு வழங்கியபோது அதனை சட்டமா அதிபர் ஏற்காது நிராகரித்து விட்டார்.

ஜனாதிபதிக்கு அவர் அனுப்பிய கடிதத்தில் தாம் பொதுமக்களுக்கு தொடர்ந்தும் சேவையாற்ற எதிர்பார்ப்பதாகவே கூறியிருக்கின்றார்.

இதுசம்பந்தமாக ஐக்கிய தேசியக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடியபோது சட்டமா அதிபர் விரைவில் அரசியலில் பிரவேசிக்கவிருப்பதை ரணில் குறிப்பிட்டிருக்கின்றார்.
அதேவேளை, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நெருக்கமான சிலரும் இதனை சிலரிடம் கூறியிருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.

அநேகமாக சட்டமா அதிபர், சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தி அல்லது முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இணைவார் என்று மற்றுமொரு தகவல் கூறுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :