கண்ணதாசனின் பேரனின் மகள் திருமணத்திற்கு தவிசாளர் ஜெயசிறில் வாழ்த்து!



காரைதீவு சகா-
லகின் தலைசிறந்த கவிஞர் கண்ணதாசனின் பேரனின் மகள் டாக்டர் செழியன் பார்கவி மற்றும் டாக்டர் சிவவிக்னேஸ் திருமண நிகழ்விற்கு காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

டாக்டர் பார்கவி டாக்டர் சிவ விக்னேஷ் அவர்களுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

என் அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய தாயக செயற்பாட்டாளர் செழியண்ணன் அவர்களுடைய அன்பு மகள் திருமணத்தில் இணைகின்ற இந்த திரு நாளிலே அவர்களை வாழ்த்துவதில் மகிழ்டைகின்றேன்.தாயகத்திற்காக பல சிந்தனைகளையும் பல செயற்பாடுகளையும் முன்னெடுத்து இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களுக்காக பல வழிகளிலும் உதவி புரிகின்ற செழியண்ணன் அவர்களுடைய மகள் டாக்டர் பார்கவிஇ அவர்களுடைய மணமகன் டாக்டர் சிவ விக்னேஷ் அவர்கள் இருவரும் இன்று திருமண நாளிலே இணைகின்றார்கள்.இவர்கள் இணை பிரியாதவர்களாக இறுதி வரையும் இருவரும் பயணிக்க வேண்டும்.இவர்களின் இதயம் இணைந்திருக்கும் இச்சந்தர்ப்பத்திலே தொடர்ச்சியாக தஞ்சை பெருமானின் அருளை பெற்று தரணியிலே பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ தஞ்சை பெருமானை பிரார்த்திக்கின்றேன்.இந்த தாயக மக்களின் சார்பாக மகளுடைய மண நாளிலே மணமக்கள் இருவரையும் வாழ்த்துவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :