கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நபரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு.



எப்.முபாரக்-
திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நபரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் கிண்ணியாவில் நேற்று(10) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா அஹமட் லேன் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான ஷேகு இப்ராகிம் முகம்மது பிஸ்மி (38 வயது) என தெரியவருகிறது.
குறித்த நபர் தொடர்ச்சியாக மது அருந்தி வருவதாகவும் அதேபோன்று நேற்று மது அருந்திவிட்டு தாயாருடன் முரண்பட்டு விட்டு மலசல கூடத்திற்கு சென்று தூக்கில் தொங்கி உள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து குறித்த இடத்திற்கு கிண்ணியா திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.ஷாபி சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கட்டளையிட்டுள்ளார்.
சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பிலான விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :