நாட்டில் கொவிட் நோயாளிகளின் உடல் இரகசியமாக வீடுகளிலேயே அடக்கம்?



J.f.காமிலா பேகம்-
கொரோனா தொற்று ஏற்பட்டு வீடுகளிலேயே சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழப்பவர்களை இரகசியமாக அடக்கம் செய்கின்ற சம்பவங்கள் இலங்கையில் இடம்பெற்றிருக்கின்றன.

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கஸ்டப்பிரதேசங்களில் இவ்வாறான சம்பவங்கள் அரங்கேறியிருப்பதாக திருகோணமலை பிரதேச சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர் டி.ஜி.எம். கொஸ்தா தெரிவிக்கின்றார்.

இதுபோன்ற தகவல்கள் கிடைத்திருக்கின்ற நிலையில் அதன் உண்மைதன்மை பற்றி விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிண்ணியா பிரதேசத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

அதன்படி, கிண்ணியா, பெரிய கிண்ணியா, குட்டிகரச்சி, எரிதார் நகர், பெரியாத்துமுனை, மாலிந்துரை, ரஹ்மானியா நகர், சின்ன கிண்ணியா, மாஞ்சோலை, குருஞ்சிக்கேணி, முனைச்சேனை உள்ளிட்ட பிரதேசங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :