சுவாசம் காக்கும் இளைஞர்களிடம் இருந்து தாய் நாடான இலங்கைக்கு ஒரு செடியினை நாட்டுவோம்!



நூருல் ஹுதா உமர்-
பாதிக்கப்பட்டு சுவாசத்திற்கு ஏங்கி தமது உயிர்களை இழக்கும் கொறோனா நோயிலிருந்து அனைவரும் பாதுகாப்பு பெற வேண்டும். எனும் நோக்கில் சுவாசம் காக்கும் இளைஞர்களிடம் இருந்து தாய் நாடான இலங்கைக்கு ஒரு செடியினை நாட்டுவோம் எனும் தொனிப்பொருளில் தெற்காசியாவின் பெரிய சுயாதீன அமைப்பான இலங்கை இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் 38 வது நிறைவு தினமான இன்று தேசிய இளைஞர் தினத்தை சிறப்பிக்கும் முகமாக ஐக்கிய சமூக முன்னணியின் ஏற்பாட்டில் சாய்ந்தமருதில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

இந்நிகழ்வில் ஐக்கிய சமூக முன்னணியின் தலைவரும் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான கபூர் அன்வர் மற்றும் பொதுச் செயலாளர் இந்தியாஸ் மதனி, ஐக்கிய சமூக முன்னணியின் தேசிய அமைப்பாளரும் தேசிய இளைஞர் கழக சம்மேளனத்தின் பிரதிநிதியான சிப்னாஸ் அஸீஸ் மற்றும் பொருளாளரும் ஆசிரியருமான அ.க.அஸ்ஹர் ஆகியோர் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நாட்டி தற்பொழுது நாட்டில் கொறோனா நோயினால் மரணித்தவர்களுக்காகவும் ஒரு நிமிட மௌன அஞ்சலியும் நிகழ்த்தினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :