நுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி



க.கிஷாந்தன்-
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (04.05.2021) 46 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கொரோனா தடுப்பு செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 பேருக்கும், ஹங்குராந்கெத்த சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 பேருக்கும், நவதிஸ்பன சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

அத்துடன், மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நால்வருக்கும், பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவருக்கும், டிக்கோயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவருக்கும், அட்டன் பிரிவில் ஒருவருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :