அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானம்



அரசாங்க தகவல் திணைக்களம்-
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானிதுள்ளது.

கொரோனா வைரசு தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்குப்பின்னர் 10 ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து வெள்ளிக்கிமையன்று தீர்மானிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளையும் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கத்தோலிக்க ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரசு தொற்று நிலைமையின் காரணமாக நேற்று (30) வரையில் நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன. இதேபோன்று கத்தோலிக்க பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ,இக் காலப்பகுதியில் இணைய சேவையின் ஊடாக கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.,

தக்ஸலாவ மற்றும் குருகுலம் போன்ற தொலைக்காட்சி சேவை நிகழ்ச்சிகளின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனிடையே, பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரும் அந்த வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :