சென்ற வருடம் முதல் கல்முனையை சேர்ந்த பிரபல சமூக செயற்பாட்டாளர் றிஷாத் ஷரீப் அவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ‘ஸகருக்காய் அடுப்பெரிக்கத் துணை நிற்போம்’ எனும் செயற்றிட்டம் இம்முறையும் நோன்பு நோற்க வசதியற்றோருக்காக முதலாவது நோன்பு முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நாளொன்றுக்கு ரூபா 500 வீதம் மொத்த நாட்களுக்கும் கணக்கிட்டு நிதியுதவியளிக்கும் இந்த செயற்றிட்டமானது உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வாழும் றிஷாத் ஷரீப் அவர்களின் நண்பர்களினதும் தாராள மனம் கொண்டோர்களினதும் நிதியுதவியை கொண்டு செயற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் வசதியற்ற குடும்பங்கள் நிம்மதியாக நோன்பை நோற்கும் வாய்ப்பு ஏற்படுத்தகப்பட்டு வருகிறது. இதன் மூலம் நிதி உதவி செய்வோருக்கு மனநிம்மதி கிடைப்பதாகவும், ஏழைகளுக்கு நோன்பு நோற்க முடிவதாகவும் இச் செயற்றிட்டத்தின் இணைப்பாளராக இருக்கும் சமூக செயற்பாட்டாளர் றிஷாத் ஷரீப் தெரிவித்தார்.
மேலும் முகம் தெரியாது தாராள மனம் கொண்டு உதவி செய்ய முன்வரும் சகல கொடையாளிகளுக்கும், உரியவர்களிடம் அந்த உதவித்தொகையை மகிழ்வுடன் கொண்டு சேர்க்கும் பிராந்திய இணைப்பாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார்.
0 comments :
Post a Comment