நாபீர் பௌண்டேஷனின் உலருணவு வழங்கும் நிகழ்வு!



க்களின் காலடிக்குச் சென்று பல்வேறு உதவிகளை தேவையுடையோருக்கு பலவருடங்களாக வழங்கிவரும் நாபீர் பௌண்டேஷன் இவ்வருட றமழானை முன்னிட்டு, சம்மாந்துறையின் 51 கிராமசேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கியவாறு; நாபீர் பௌண்டேஷனுடன் இணைந்து செயற்படும் மாதர் சங்க உறுப்பினர்களுக்கு, உலருணவு வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.

நாபீர் பௌண்டேஷனின் நிறுவுனரும் சம்மாந்துறையில் அமைந்துள்ள ECM நிர்மாணக்கம்பனியின் உரிமையாளரும் சமூக சிந்தனையாளரும் பொறியியலாளரும் சட்டமாணியுமான அல்ஹாஜ் உதுமான்கண்டு நாபீர் அவர்களது வழிகாட்டலின் கீழும் நிதியுதவியுடனும் தேவையுடைய குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நாபீர் அவர்களது இல்லத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வின்போது நாபீர் பௌண்டேஷனின் உயர்மட்ட உறுப்பினர்களும் பங்கு கொண்டிருந்தனர். நாபீர் பௌண்டேஷன் பலவருட காலமாக தேவையுடைய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :