எச்சரிக்கை மிக்க மாவட்டங்களாக கொழும்பு,குருணாகல், கம்பஹா!



J.f.காமிலா பேகம்-
கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் ஆகிய மூன்று மாவட்டங்களும் அதிக அவதானமிக்க மாவட்டங்கள் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
இந்த மாவட்டங்களில் நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவிக்கின்றார்.

இலங்கையில் தற்போது மிகவும் அவதானமான நிலைமை காணப்படுவதாகவும் அவர் எச்சரிக்கை விடுக்கின்றார்.

மேல் மாகாணம் மற்றும் வடமேல் மாகாணங்களை மாத்திரமன்றி, இலங்கையின் ஏனைய சில பகுதிகளிலும் கொவிட் தொற்று சடுதியாக அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இந்த வாரம், மிகவும் பொறுப்புடன் செயற்படுமாறு தாம் பொதுமக்களை கேட்டுக்கொள்வதாகவும் அவர் கோரிக்கை விடுக்கின்றார்.

பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தாம் எதிர்பார்த்த போதிலும், அது இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் கூறுகின்றார்.

இந்த நிலைமையின் கீழ், பொதுமக்கள் 100 வீதம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :