மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களின் மறைவு ஆழ்ந்த துயரளிக்கிறது.- காதர் மஸ்தான் எம்.பி.



எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
ன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவருமான காதர் மஸ்தான் அவர்கள் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மன்னார் மறை மாவட்ட ஆயர் உயர்திரு இராயப்பு ஜோசப் அவர்கள் காலமான செய்திகள் இன்று ஆழ்ந்த துயரளிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் மன்னார் மாவட்டத்தில் ஆயராக பணியாற்றிய காலப்பகுதியில் கத்தோலிக்க மக்களுக்கு மதரீதியான தலைமைத்துவத்தை சிறப்பாக வழங்கிய ஒருவராக அவரை நான் காண்கிறேன்.

அனைத்து இனமக்களோடும் ஒற்றுமையாகவும் நல்லிணக்கமாகவும் வாழவேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார்.

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் பிறந்த அவர் தமிழுணர்வு மிக்கவர்.

தனது மக்களை மிகவும் நேசித்தவர்,வைத்தியரான அவரது தந்தையும் இனமத பேதமற்றவர், மக்களுடன் சகோதரத்துவ வாஞ்சையுடன் நடந்தவர்.

இவ்வாறான பின்னணியைக் கொண்ட உயர்திரு. இராயப்பு ஜோசப் ஆயரின் மறைவில் முழு வட மாகாணமும் வேதனையுற்றிருக்கின்றது.

அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் ஆயர் இல்லத்தினர், குருமார்கள் மற்றும் உறவினர்கள், கத்தோலிக்க பெருமக்கள் அனைவருக்கும் எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :