அல்- அர்ஹம் வித்தியாலயத்தின் பழைய மாணவர்களுக்கிடையிலான சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிகள் இன்று (02-04-2021) கடற்கரை மைதானத்தில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.
இறுதிப் போட்டியில் 2013ம் ஆண்டு மாணவர்கள் மற்றும் 2003ம் ஆண்டு மாணவர்கள் மோதினர்.
முதலில் துடுப்பெடுத்தாடிய 2013ம் ஆண்டு அணியினர் 5 ஓவர்களுக்கு 65 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 2003ம் ஆண்டு அணியினர் 4ஓவர்களுக்குல் சகல விக்கட்டுக்களையும் இழந்து 6 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.
பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த இச் சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அல்-அர்ஹம் வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எம்.எம்.இத்ரீஸ் அதிபர் . அதிதிகளாக பாடசாலையின் பிரதிஅதிபர் ஓ.எல்.எம்.றிஸ்வான், பழைய மாணவர் சங்க செயலாளர் எஸ்.எல்.பஸீல், பழைய மாணவர் சங்க பொருளாளர் ஏ.எல்.ஜனூஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் ஆசிரியருமான ஏ.எல். அஜ்மல் ஆகியோரும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் பார்வையாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் பழைய மாணவர் சங்கத்தினால் பாடசாலைக்கு கரப்பந்துகளும் வெற்றியீட்டிய வீரர்களுக்கு பதக்கங்களும், கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment