கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக டொக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீத் கடமைகளைப் பொறுப்பேற்றார்.


எப்.முபாரக்-

கி
ழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக டொக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீத் உத்தியோகபூர்வமாக இன்று (09) தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருகோணமலை நீதிமன்ற வீதியில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணியகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

சம்மாந்துறையை பிறப்பிடமாக கொண்ட இவர் வெலிசற சுவாச நோய்களுக்கான தேசிய வைத்தியசாலையின் அத்தியட்சகராகவும், நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் ராகம போதன வைத்தியசாலை ஆகியவற்றில் வைத்திய அத்தியட்சகராகவும், சுகாதார அமைச்சின் கீழுள்ள அனைத்து வைத்தியசாலைகளின் ஆய்வுகூடங்களுக்கான அத்தியட்சகராகவும் கடமையாற்றி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன், திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந், சமூக வைத்திய நிபுணர் டொக்டர் அருள்குமரன் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :