பாடசாலை சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது

திருகோணமலை பாருக்-


நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாடசாலை சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டுக்காக நிலாவெளி பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 35 வயதுடையவர் எனவும் தெரிவிக்கின்றனர்.

13 வயது சிறுமியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, சந்தேக நபர் சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :