ஹொரன பெருந்தோட்ட கம்பனிக்குற்பட்ட்ட சாமிமலை ஒல்டன் தோட்டத்தில கடந்த பெப்ரவரி 02 ஆம் திகதி தோட்ட முகாமையாளர் தொழிலாளர்கள் இருவரை தாக்கிய சம்பவத்தோடு, தொடர்புபட்ட முகாமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி தொடர்ச்சியாக பணி பகிஷ்கரிப்பினை மேற்கொண்டுவருவதோடு
இது தொடர்பாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கு ஏற்ப தேசிய அமைப்பாளர் ஜீ.நகுலேஸ்வரன் தலைமையில் விஷேட குழு களத்திற்கு சென்று ஆராய்ந்தது.
தொழிலாளர்களின் கோரிக்கைக்கு அமைவாக ஹட்டன் தொழில் தினைக்களத்தில் முறைப்பாட்டினை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக களத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர் சுரேஷ்குமார் தொழிலுறவு அதிகாரிகள். மருதைவீரன் ஜெயபாலன்.
மற்றும் மாவட்ட தலைவர் கே..கருனாகரன் மற்றும் அமைப்பாளர்கள் ஜே.தேவேந்திரன் மற்றும் பாலசுந்தரம் போயினீஸ் சசி. தியாக உட்பட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment