மட்டு.மாவட்ட மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல்தரை அபகரிப்பு தொடர்பான கொழும்பு மேல்நீதிமன்ற வழக்கின்படி இன்று(28) ஞாயிற்றுக்கிழமை அங்கு அத்துமீறி விவசாயம்செய்த பெரும்பான்மையினத்தவர் வெளியேறவேண்டும்.இதனை சட்டமாஅதிபர் திணைக்கள அரசசட்டத்தரணி உறுதிப்படுத்தவேண்டும்.
இவ்வாறு மட்டு.மாவட்ட மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல்தரை அபகரிப்பு தொடர்பாக வழக்குதாக்கல்செய்து வழக்கைமுன்னெடுத்துவருபவர்களில் ஒருவரான த.தே.கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம்(ஜனா) தெரிவித்தார்.
வழக்குவிசாரணை எதிர்வரும் மே 12வரை ஒத்திவைக்கப்பட்டநிலையில் கடந்த 23ஆம் திகதி கொழும்பு மேல்நீதிமன்றில் என்ன நடந்தது என்று கேட்டபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த சேனைபயிர்ச்செய்கையாளர்களுக்கு தற்காலிக அனுமதியை மகாவலிஅதிகாரசபை வழங்கியிருந்தது. அவ் அனுமதி இன்று 28ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருவதால் அவர்கள் நாளை வெளியேறுவார்கள் என அரசசட்டத்தரணி மன்றில் தெரிவித்ததாக தமது சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் எம்மிடம் கூறினார்.
நீண்டகாமாக பாற்பண்ணையாளர்கள் தமது 1லட்சத்துக்குமேற்பட்ட கால்நடைகளை மேய்த்துவரும்போது அங்கு 617 பெரும்பான்மையினத்தவர் அண்மையில் சேனைப்பயிர்ச்செய்கைக்காக புதிதாக வந்து ஆக்கிரமித்தனர். இதனையடுத்து அவர்களை அகற்றுமாறுகோரி வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே.
0 comments :
Post a Comment