தேயிலை மலையில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிராக பொகவந்தலா செல்வகந்தை தோட்ட தொழிலாளர்கள் ஆர்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்
நோர்வூட் பிரதேசசபைக்குற்பட்ட ஸ்ரீபுர ஆரியபுர பகுதொயிலுள்ள குப்பைகளை பிரதேசசபை கழிவகற்றல் ஊழியர்கள் குறித்த தோட்ட பகுதியில் கொட்டிவிட்டு செல்வதாக கூறி பொகவந்தலா அட்டன் பிரதான வீதியில் சுகாதர விதிமுறைய பேணி இந்த ஆர்பாட்டம் 06/01 கா லை முன்னெடுக்கப்பட்டது
இதன்போது ஆர்பாட்டகாரர்கள் தெரிவித்ததாவது பிரதேசசபையினால் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட பாரதிபுரத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது .
இருந்து பிரதேசசபை கழிவகற்றல் தொழிலாளர்கள் செல்கந்தை தோட்டப்பகுதியில் வீசிவிட்டு செல்வதால் துர்நாற்றம் வீசுவதால் தொழில் செய்யமுடியாதுள்ளதாக குற்றம் சுமத்தியதுடன் இது தொடர்பில் நோர்வூட் பிரதேசசபை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர் .
ஆர்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகைத்தந்த நோர்வூட் பிரதேசசபை தலைவர் ரவி குழந்தைவேல் தெரிவித்ததாவது..
ஸ்ரீபுர மற்றும் ஆரிய புர பகுதியில் குப்பைகளை வகைப்படுத்தி தொடந்து பிரதேசசபையினூடாக சேரிக்கப்பட்டு கொண்டு செல்வதாகவும் செல்வகந்தை தோட்ப்பகுதியில் குப்பைளை கொட்டுவது பிரதேசசபையல்ல அவ்வழியில் வேலைக்கு செல்பவர்களே இவ்வாறு வீட்டு கழிவுகளை வீசிவிட்டு செல்வதாக குற்றம் சாட்டியதுடன் உரியவர்களை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்ததுடன் இது தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்
0 comments :
Post a Comment