கல்முனையில் ஆயிரத்தை தாண்டிய கொரோனாத்தொற்று!



வி.ரி.சகாதேவராஜா-
ல்முனை சுகாதாரப் பிராந்தியத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை 1000ஜத் தாண்டியுள்ளது. அண்மித்துள்ளது. கல்முனைப்பிராந்தியத்தில் இதுவரை 1012 ஆக தொற்றுக்கள் இனங்காணப்பட்டிருக்கின்றன என கல்முனை சுகாதாரப் பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் தெரிவித்தார். 

இறுதியாக கல்முனை தெற்கில் 19 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதையடுத்து கிழக்கின் தொற்றுக்களின் எண்ணிக்கை 1012 ஆகியது. கல்முனைப்பிராந்தியத்துள் வருகின்ற அக்கரைப்பற்றுக் கொத்தணியில் 972 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மீதி பிராந்தியத்தின் ஏனைய சுகாதாரப்பிரிவுகளில் இனங்காணப்பட்டுள்ளது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் டொக்டர் குண.சுகுணன் நேற்று  (14) வியாழன் காலை இத் தரவுகளை வெளியிட்டுள்னார்.

பிரதேசங்களின் நிலைமை

பிராந்தியத்தில் தனியொரு பிரிவு அதிகூடிய தொற்றுக்களைக்கொண்டது என்றால் அது 310 தொற்றுக்களைக் கொண்ட அக்கரைப்பற்று எனலாம். இரண்டாவதாக கல்முனை மாநகரஎல்லைக்குள் 350 தொற்றுக்கள் அதிகரித்திருக்கிறது.

கல்முனை தெற்கில் 268 பேரும் சாய்ந்தமருதில் 65 பேரும் கல்முனை வடக்கில் 17 பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அட்டாளைச்சேனையில் 88 தொற்றுக்கள். பொத்துவிலில் அதிகரிப்பு காட்டியுள்ளது. அங்கு தொற்றுக்களின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது. உல்லைப்பகுதி முடக்கப்பட்டுள்ளது. ஆலையடிவேம்பில் 36 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.இறக்காமத்தில் 24 பேரும்திருக்கோவிலில் 15 பேரும் சம்மாந்துறையில் 27 பேரும் காரைதீவில் 46 பேரும் நிந்தவூரில் 20 பேரும் நாவிதன்வெளியில் 17 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர். இன்னும் பெறப்பட்ட பிசிஆர் சோதனைகளின் பெறுபேறுகள் கிடைக்கப்பெறவில்லை. அவை வந்தால் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிராந்தியத்திலுள்ள பாலமுனை சிகிச்சை நிலையத்தில் 88 பேரும் புதிதாக உருவாக்கப்பட்ட மருதமுனை சிகிச்சை நிலையத்தில் 66 பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். பிராந்தியத்திலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களான ஒலுவிலில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை.அட்டாளைச்சேனையில் 155 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.. நுரைச்சோலை நிலையம் தயாராகிவருகிறது. இதுவரை கல்முனைப்பிராந்தியத்தில் ஆறு கொரோனா இறப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை இப்பிராந்தியத்தில் 23685 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.பிசிஆர் சோதனை 12674 பேருக்கும் அன்ரிஜன் சோதனை 11011 பேருக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :