வவுணதீவு காஞ்சிரங்குடா பிரதேசத்துக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் வேலைத்திட்டம்..

எஸ்.எம்.எம்.முர்ஷித்-

“நீரின்றி அமையாது உலகு”
என்கின்ற தொனிப்பொருளுக்கு அமைவாக ஜனாதிபதி மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோரின் பங்களிப்புடன் தேசிய நீர்வழங்கல் திணைக்களத்தின் ஊடாக கொண்டு வரப்பட்ட “பிரஜா ஜல அபிமானி” என்கின்ற நாடு பூராகவும் ஆயிரம் கிராமங்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்கும் வேலைத்திட்டத்தின்
நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மூலம் கொண்டுவரப்பட்ட காஞ்சிரங்குடா பிரதேசத்திற்கான பாதுகாப்பான குடிநீர் வசதி திட்டத்திம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதுபோன்று எதிர்வரும் காலங்களில் வவுனதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் இந்த குடிநீர் விநியோகத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதற்க்கான திட்ட முன்மொழிவினை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் பிரதமரிடமும் பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்தரகாந்தன் சமர்ப்பித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :