தலவாகலை நகைகடையில் கைவரிசை - சீ.சீ. டி.வி காணொளியின் உதவியுடன் பொலிஸ் வளைவீச்சு


நோட்டன் பிரிட்ஜ்  எம்.கிருஸ்ணா-

ங்க நகை விற்பனை நிலையத்தில் ஒரு லட்சம் ரூபாய் பெருமதியான நகையை திருடிச்சென்றவரை பிடிக்க சீ.சீடி.வி.கமராவின் காணொளியின் உதவியுடன் பொலிஸார் வளைவிரித்துள்ளனர்

தலவாகலை நகரிலுள்ள தங்க நகை விற்பனை நிலைமொன்றிலே 24/12/2020 மாலை மூன்று மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது .
குறித்த விற்பனை நிலையத்திற்கு வந்த நபர் மாலை ஒன்றினை கொள்வனவு செய்வதற்காக வந்து சூட்சமான முறையில் ஒரு லட்சம் ரூபாய் பெருமதியான தங்க சங்கிளியை திருடிச்சென்றமை சீ.சீ.டி.வி காணொளியில் பதிவாகியுள்ளது

குறித்த சந்தேக நபர் முககவசம் அணிந்து வந்து தங்க நகை கொள்வனவு செய்வது
போல் பாசாங்கு செய்து தங்க சங்கிளி ஒன்றினை நிலத்தில் போட்டுவிட்டு பின்
அதனை அவர் அணிந்திருந்த காற்சட்டையின் பையினுள் எடுத்து வைக்கும் காட்சி நிலையத்தில் பொருத்தபட்டிருந்த சி.சி.டி.வி கமராவில் பதிவாகியுள்ளது

திருட்டு சம்பவம் தொடர்பில் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் தலவாகலை
பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டதையடுத்து
சி.சி.டி.வி.காணொளியின் உதவியோடு சந்தேக நபரை பொலிஸார்
தேடிவருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை தலவாகலை

பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :