இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உலகின் எடை குறைந்த செயற்கைகோளை உருவாக்கி இந்திய நாட்டிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திருக்கும் தஞ்சை கரந்தை பகுதி பொறியியல் மாணவர் ரியாஸ்தீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மாணவர் ரியாஸ்தீன் வடிவமைத்து உருவாக்கிய விஷன் சாட் V1 மற்றும் V2 ஆகிய இரு செயற்கைகோள்களையும் நாசா எனும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 2021ல் விண்ணில் ஏவவிருப்பது நாட்டிற்கும் தமிழகத்திற்கும் கூடுதல் பெருமை சேர்க்கும்.
அறிவியல் உலகும் வியக்கும் வகையில் தொடர்ந்து மென்மேலும் புதிய கண்டுபிடிப்புகளுடன் வளர்ச்சியடைய மாணவர் ரியாஸ்தீனுக்கு வாழ்த்துக்கள்.
மாணவர் ரியாஸ்தீனை போன்று அறிவியல் உலகில் தொடர்ந்து சாதனை புரிந்து வரும் மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழக அரசு உரிய செயல்திட்டத்தினை வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்
0 comments :
Post a Comment