தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கத்தின் வாகனம் மீது இன்று(14) இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மது போதையில் வந்த இளைஞர் குழுவினரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வவுனியா கற்பகபுரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று பொலிஸார் மேலும் கூறினர்.
0 comments :
Post a Comment