பதவி நீக்கம் செய்யப்பட்டார் சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளர்!

J.f.காமிலா பேகம்-
சுகாதார அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஜயருவான் பண்டார அப்பதவியில் இருந்து இன்றையதினம் நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார் மருத்துவர் ஜயருவான் பண்டார.

பின்னர் சுகாதார அமைச்சின் பேச்சாளராக நியமிக்கப்பட்டார்.இந்தநிலையில் நாளாந்தம் கொரோனா தொடர்பான நிலைமைகளை தெரிவித்து வந்தார்.

இவ்வாறு பதவியிலிருந்து நீக்கப்பட்ட அவர் இன்றிலிருந்து ஊடகங்களுக்கு எவ்வித தகவலும் அளிக்கப்படக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :