மருதமுனை பொதுஜன பெரமுன கிளையின் விஷேட கூட்டம்..

றாசிக் நபாயிஸ்-

ருதமுனை பொதுஜன பெரமுன கிளையின் விசேட கூட்டமும்
கிளை பதிவுக்கான ஆவணங்கள் வழங்கும் நிகழ்வும்.
எம்.எல்.எம்.முஸ்தபா தலைமையில் இன்று (2020/20/18) இடம் பெற்றது.

இதில் மருதமுனையின் சமகால அரசியல் நிலைமைகள், எதிர்கால வேலைத்திட்டங்கள், ஏழை மக்களுக்கு வாழ்வாதார உதவி வழங்குதல் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தல் போன்ற விடயங்கள் சம்பந்தமாக பேசப்பட்டதுடன் ஜனாதிபதி, பிரதமரின் கொள்கை திட்டங்களுக்கு அமைய வருங்கால செயற்திட்டங்களை முன்னெடுப்பது எனவும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வின் கிளையின் செயலாளர் ஜ.எல்.எம். முதுலித்தீன் அவர்களுக்கு கிளையின் பிரதம ஆலோசகர் ஓய்வு பெற்ற அதிபர் ஏ.எம்.ஏ.சமட் அவர்களால்
பொதுஜன பெரமுன கட்சியின் அடையாள அட்டை வழங்கப்பட்டதுடன் பொருளாளர் எம்.ஆர்.எம்.றிஸ்லி அவர்களிடம் கிளையின் பதிவுக்கான ஆவணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இதில் கலந்து கொண்ட மருதமுனையில் பொதுஜன பெரமுன அங்கத்தவர்களுக்கு பகல் போசனமும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :