மருதமுனை பஸ் நடத்துநரின் குடும்பத்திற்கு கொரோனா தொற்று இல்லை-பி.சி.ஆர் பரிசோதனை முடிவு வெளியானது


பாறுக் ஷிஹான்-


ருதமுனை பஸ் நடத்துநரின் குடும்பத்திற்கு கொரோனா தொற்று இல்லை என்ற பி.சி.ஆர் பரிசோதனை முடிவு வெளியாகியுள்ளது.

அம்பாறை பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் என கண்டுபிடிக்கப்பட்ட இரு கம்பஹா ஆடைதொழிற்சாலை பணியாளர்களை அழைத்து வந்த பஸ் நடத்துநர் உட்பட அவரது மனைவி மற்றும் பிள்ளை ஆகியோரை நேற்று பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த பட்டிருந்தனர்.

இதற்கமைய இன்று (7) மாலை இப்பரிசோதனையின் படி நெகடிவ் முடிவு வெளியாகியதாக சுகாதார பிராந்திய முக்கியஸ்தர் குறிப்பிட்டார்.

கம்பஹா ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி விடுமுறை பெற்று அம்பாறை பகுதியில் உள்ள வீடுகளுக்கு வந்த இருவர் கொரோனா தொற்றாளர் என அடையாளப்படுத்தபட்டுள்ள நிலையில் மக்களுக்கான விழிப்புணர்வு செயற்திட்டத்தினை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :