கொழும்பில் நட்சத்திர விடுதியொன்றில் இன்று இடம்பெற்ற பிரபல அரசியல்வாதி ஒருவரது மகனுடைய திருமண நிகழ்வு பொலிஸாரின் தலையீட்டை அடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.
மலையகத்தைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதி ஒருவரது மகனுடைய திருமணமே இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டது.
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தும் ஊரடங்குச் சட்டம் விதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மேற்படி திருமண நிகழ்வும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment