கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் ஒருவர் கைது.



எப்.முபாரக்-
திருகோணமலை-கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் ஒருவரை நேற்றிரவு(5) கைது செய்துள்ளதாக விஷேட பொலிஸ் அதிரடி படையினர் தெரிவித்துள்ளனர்.
கந்தளாய் - சூரியபுர விசேட பொலிஸ் அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த சந்தேகநபரை சோதனையிட்ட போது அவரிடமிருந்து 39 பெக்கெட் ஹெரோயின் மற்றும் 2 கிராம் 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டதாகவும் விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா மதீனா நகர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் எனவும் தெரியவருகின்றது.
கைது செய்யப்பட்ட குறித்த இளைஞரை கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் ஏற்கனவே சந்தேகநபருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அதன் பின்னர் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :