இவ்வாண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில், க.பொ.த. உயர்தரம் ஆகிய பரீட்சைகளில் தோற்றவுள்ள மாணவர்களின் நலன்கருதி பாடசாலைகளின் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கான வேலைத்திட்டத்தை சுகாதாரப் பிரிவினர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில், கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் குறித்த அலுவலகப் பிரிவிலுள்ள பாடசாலைகளுக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் விஜயத்தை மேற்கொண்டு சுற்றுச் சூழலை கண்காணித்து வருகின்றனர்.
அதன் தொடரில், வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட பாடசாலைகளின் மாணவர்களின் நலன்கருதி டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்த புகை விசுறும் நடவடிக்கையும் நேற்று (9) முன்னெடுக்கப்பட்டது.
0 comments :
Post a Comment