J.f.காமிலா பேகம்-
கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், ஊரடங்கு உத்தரவை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரை 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, 18 மோட்டார் சைக்கில்கள் மற்றும் முச்சக்கர வண்டியொன்றும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட 18 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment